×

காரிமங்கலம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

காரிமங்கலம், டிச.17: கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பகுதியில் இருந்து திருவாரூரை சேர்ந்த சண்முகம் (20), அவரது நண்பர்கள் சிலம்பரசன் (22), சந்தோஷ் (20) ஆகியோர் ஒரே டூவீலரில் தர்மபுரி நோக்கி சென்றனர். காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி டூவீலர் மீது மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சிலம்பரசன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிலம்பரசன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். தொடர்ந்து சந்தோஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரிமங்கலம் அருகே லாரி மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Shanmugam ,Akaram ,Krishnagiri district ,Thiruvarur ,Silambarasan ,
× RELATED காண்ட்ராக்டர் வீட்டில் ₹5 லட்சம், நகை திருட்டு